ஆதரவாளர்கள்

வியாழன், 18 செப்டம்பர், 2014

சமூக அமைப்புகளால் பெருகும் ஊழல்

நமது நாட்டில் NGO (அரசு சாரா சேவை அமைப்புகள் ) கணக்கில்லாமல் இருக்கின்றன. குடும்ப அட்டைகளின் எண்ணிக்கையை விட இந்த அமைப்புகள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
இந்த அமைப்புகள் எல்லாம் தனது நோக்கமாக பதிவு செய்திருக்கும் செயல்களை உண்மையாக செய்திருந்தால் அரசாங்கம் மக்களுக்காக எதுவும் செய்ய தேவையில்லை.

இந்த அமைப்புகள் சில வெளிநாட்டு உதவியும் பெறுகின்றன
ஒருலட்சம் கோடி ரூபாயுக்கும் மேலாக கடந்த சில ஆண்டுகளில் வெளிநாட்டில் இருந்து நன்கொடை மட்டும்.
இந்தியாவில் உள்ள மொத்த மாற்றுத் திறனாளிகள் எண்ணிக்கையை விட மாற்றுத் திறனாளிகளுக்கு உதவும் அமைப்புகள் அதிகமாக உள்ளன
ஒரு அமைப்பு ஒருவரை எடுத்துக் கொண்டால் அங்கே இவர்கள் உதவி ஏற்றுக்கொள்ள ஆட்கள் இல்லாமல் பற்றாக்குறை ஏற்ப்படும் ஆனால் ஒவ்வொரு அமைப்பினரும் நூறுக்கும் குறையாமல் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி வருவதாக கணக்கு சொல்கின்றன.
இது உதாரணம் தான் இதுபோன்று எண்ணற்ற அமைப்புகள் உருவாக்கி வரிவிலக்கு பெற்று அரசுக்கு செல்லவேண்டிய பணத்தை வீணாக்குகின்றன.
ஆகவே நன்மக்களே !
நீங்கள் சேவை செய்யுங்கள் அது உங்களது வரிக்கு பிந்தைய வருவாயாக இருக்கட்டும்
சேவை செய்யுங்கள் அரசாங்கத்திற்கு செல்லும் பணத்தை குறுக்கு வழியில் களவாடும் நிறுவனங்களிடம் நன்கொடை வாங்காதீர்கள்
சேவை செய்யுங்கள் உங்களின் அறிவைக் கொடுங்கள் உங்களது கற்றலைப் பகிருங்கள் குடிமக்கள் தங்கள் தேவைகளை பெற வழிகாட்டுங்கள்
தவறு செய்யும் தவறான வழியில் பொருள் ஈட்டும் ஒவ்வொரு அரசு அலுவலர்களும் தொழில் அதிபர்களும் சமூக விரோதிகளுக்கும் அடைக்கலமாக இருக்கும் சமூக சேவை அமைப்புகளை நன்கொடை பெற தடை கோருவோம். நன்கொடை பெறாமல் சேவை செய்யட்டும்.

கருத்துகள் இல்லை: