ஆதரவாளர்கள்

திங்கள், 7 அக்டோபர், 2013

தகவல் உரிமைச் சட்டம் 2005 இரண்டாம் நிலைப் பயிற்சி (முதல் நிலைப் பயிற்சி முடித்தவர்கள் மட்டும்)


நன்மக்களே  வணக்கம்
சுய மரியாதையை இழக்காமல், அலைந்து திரியாமல், இடைத் தரகர்களை நம்பி ஏமாறாமல், லஞ்சம் தராமல், தன குடும்பத் தேவை உள்பட அனைத்து தேவைக்கும் அரசிடம் இருந்து பெற தகவல் உரிமைச் சட்டம் 2005 இன் மூலம் தீர்வு. மனுக்களை எழுத சொல்லித்தர இரண்டாம் நிலைப் பயிற்சி
இலவச தொடர் பயிற்சி 17-11-13  அன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை
 முதல் நிலைப் பயிற்சி முடித்தவர்கள் மட்டும்

 முன்பதிவிற்கு 9994658672 9444305581

முகவரி இந்தியன் குரல் உதவி மையம் 29 கும்பத் காம்ளெக்ஸ், முதல் தளம் ரட்டன் பஜார் சென்னை 600003 பூக்கடைக் காவல் நிலையம் எதிரில்

பயிற்சியில் என்ன கற்றுக்கொள்ளலாம் ?
1 தகவல் சட்டம்
2 தகவல் சட்டம் மனுக்களை தயாரிப்பது எப்படி
3 நாம் அளிக்கும் புகார் மற்றும் கோரிக்கை மனுக்களின் மீது அலுவலர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க தகவல் சட்டத்தை பயன்படுத்துவது எப்படி?
4 அலுவலக நடைமுறைகள் , விதிமுறைகள் அறிதல்.
5 அலுவலர்கள் கடமைகள் அரசு துறைகளில் மக்களின் உரிமைகள்
6 அலட்சியம் காட்டும் அல்லது கடமை தவறும் அலுவலர்கள் மீது புகார் செய்து நடவடிக்கை எடுப்பது எப்படி
7 கல்விக்கடன் உள்ளிட்ட வங்கிக் கடன்கள் தகவல் சட்டத்தின்மூலம் பெறுவது எப்படி
.8 அரசு துறைகளின் பயன்கள் மக்கள் சாசனம்
9 தகவல் சட்டம் மூலம் ஊழலை ஒழிப்பது  எப்படி?
10 நல்வாழ்வு வாழ வாழ்வியல் கல்வி


பயிற்சியில் கலந்துகொள்ள விதிமுறைகள்

1 பயிற்சியில் கலந்துகொள்பவர்கள் தொடர்ந்து மாதம் ஒருநாள் வீதம் 5 மாதங்கள் தொடர்ந்து வரவேண்டும் இடையில் நின்று அடுத்த மாதம் கலந்துகொள்ள இயலாது மீண்டும் அடுத்த பிரிவில் முதல் மாதத்தில் இருந்துதான் வரவேண்டும்
2 மதிய உணவு உள்ளிட்ட தங்களின் தேவைகளை தாங்களே பார்த்து எடுத்து வரவேண்டும்
3 பாஸ்போர்ட் அளவு புகைப்படம் இரண்டு, 60 பக்கம் நோட்டு பேனா கட்டாயம் எடுத்துவர வேண்டும்
4 வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்கள் வந்து போகும் செலவுகளை அவர்களே பார்த்துக் கொள்ள வேண்டும்
5 பயிற்சி முடித்ததும் குறைந்தபட்சம் மாதம் இரண்டு நாள்  அல்லது வாரம் ஒரு நாட்கள் உதவி மையம் கட்டாயம் நடத்திடல் வேண்டும்
 6 பயிற்சி முடித்த பிறகு தங்களது சொந்த செலவில் அருகில் உள்ள மாவட்டங்களுக்கு பயிற்சி அளிக்க கூட்டங்களில் கலந்துகொள்ள குறைந்தபட்சம் மாதம் இரண்டு முறை சென்றுவரும் அளவு பொருளாதார வசதி இருக்க வேண்டும்.
7 நிரந்தர வருவாய் வசதி உள்ளவர்களாக (மாதாந்திரப் பனி அல்லது சுய தொழில் ) இருப்பது கட்டாயம்
8 ஆர்வமுள்ள எந்த அமைப்பினரும் மதத்தினரும் பயிற்சியில் கலந்துகொள்ளலாம்

9 பிற விதிகள் பயிற்சியில்

உதவி மையம் நீங்கள் சார்ந்துள்ள அமைப்பின் பெயரில் அல்லது எந்த பெயரில் வேண்டுமானாலும் நடத்திடலாம்.
இந்தியன் குரல் அமைப்பின் பெயரில் நடத்திட  நீங்கள் விரும்பினால் எழுத்து பூர்வ அனுமதி இந்தியன் குரல் அமைப்பிடம் பெறுவது அவசியம்.

 அலுவலர் பணிகடமை அலுவலக நடைமுறை , அலுவலகத்தில் யாரிடம் புகார் அல்லது கோரிக்கை மனுக்கள் கொடுக்கவேண்டும் என்றும் தான் கொடுக்கும் கோரிக்கை மற்றும் புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கத் தவறும் அலுவலர்மீது புகார் செய்வது எப்படி என்று அறிந்தவர்கள் லஞ்சம் கொடுப்பதில்லை குறித்த காலத்தில் அவர்களது தேவை நிறைவேற்றிட தன்னம்பிக்கையுடன் தைரியமாக கேட்டு வெற்றி பெறுகின்றார்கள்

அரைகுறையாக சட்டம் தெரிந்தவர்களும் தன்னம்பிக்கை அற்றவர்களும்  தவறாகவோ அல்லது முடியாது நடவாது என்று சொல்லிக்கொண்டு தெரிந்தோ தெரியாமலோ தானும் கெட்டு சமுதாயத்தையும் கெடுக்கும் வாய்ச்சொல் வீரராக இருக்கின்றார்கள்.

 இனி வரும் சமுதாயம் வளமானதாக வளரும் இளைய சமூகம் தன்னம்பிக்கையுடன் உரிமையை பெற நீங்களும் உங்களது பிள்ளைகளும்    உங்கள் தேவைகளை போராட்டமின்றி பெற்றுக்கொள்ள, மகிழ்வுடன் வாழ பயிற்சியில் கலந்து பயன் பெறுங்கள்.

 நீங்கள் சார்ந்த அல்லது உங்கள் அமைப்பின் உறுப்பினர்களுக்கு மட்டும் தனியாக பயிற்சி வேண்டினால் உங்கள் அமைப்பின் 15 உறுப்பினர்களை தேர்வு செய்துவிட்டு பிறகு தொடர்பு கொள்ளவும் பயிற்சி சென்னையில் மட்டும் தான் நடைபெறும்.
தகவல் சட்டத்தைக் கூர்மையாக பயன்படுத்தினால் உங்கள் பகுதி எம் எல் ஏ அல்லது எம் பி என்னவெல்லாம் மக்களுக்காக செய்யமுடியுமோ எந்த அலுவலர் எல்லாம் விரைந்து செயல்பட்டு வேலையை முடித்துக் கொடுங்கள் என்று சொல்ல முடியுமோ அதையெல்லாம் விட கூடுதலாக உங்களால் முடியும்

ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் தன சுய மரியாதையை இழக்காமல் அலைந்து திரியாமல் இடைத் தரகர்களை நம்பி ஏமாறாமல் யாருக்கும் இலஞ்சம் தராமல் தன குடும்பத் தேவை ஊரின் தேவைக்கு மத்திய மாநில அரசு திட்டங்களை செயல்படுத்திட கீழ் மட்ட ஊழலை அறவே ஒழித்திட தகவல் சட்டத்தை முழுமையாக பயன்படுத்தும் மக்கள் வேண்டும் அதற்கு உதவி மையங்கள் நடத்திட அறிவார்ந்த நன்மக்கள் முன்வர வேண்டும்.

இந்தியன் குரல் தமிழக முக்கிய நகரங்களில் உதவி மையம் நடத்துகின்றது இது போதாது ஒவ்வொரு கிராமத்திலும் இதுபோன்ற மையங்கள் நடந்திட வேண்டும்

பேசுவது மடமை தீர்வு  காண்பதே அறிவு - பாலசுப்ரமணியன்
 இந்தியன் குரல்
9444305581



தகவல் சட்டத்தைப் பரப்புரை செய்வதும் பயிற்சி அளிப்பதும் சட்டத்தைப் பாதுகாப்பதும் - இந்தியன் குரல் நோக்கம்
நன்கொடை பெறுவதில்லை,  அமைப்பில் உறுப்பினர் சந்தா வசூலிப்பதும் இல்லை எந்த உதவிக்கும் சேவைக்கும் கட்டணம்  வாங்குவதில்லை - இது இந்தியன் குரல் கொள்கை
www.voiceofindian.org
www.vitrustu.blogspot.com
www.facebook.com/voiceofindianorg

VOICE OF INDIAN
9443489976
9444305581

கருத்துகள் இல்லை: