ஆதரவாளர்கள்

திங்கள், 27 மே, 2013

26-05-2013 அன்று நடைபெற்ற கூட்டத்தில் .............

தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்த 26-05-2013 அன்று நடைபெற்ற கூட்டத்தில் வரப்பெற்ற கருத்துக்கள்
! மனுதாரர்களை ஆணையர்கள் ஒருமையில் அழைக்கின்றார்கள்
2 மனுதாரர்களை ஆணையர்கள் மிரட்டுகின்றார்கள்
3 மனுதாரர்களின் எழுத்து மூல வாக்குமூலம் கொடுத்தால் வாங்க மறுக்கின்றார்கள்
4 மனுதாரர்களை கோர்ட் அவமதிப்பு செய்ததாக புகர் செய்து சிறைக்கு அனுப்புவோம் என்று தகவல் ஆணையர்கள் சொல்ல்கின்றார்கள்
5 மனுதாரர்களின் வாக்குமூலம் பதிவு செய்வதே இல்லை
6 தகவல் ஆணையர்களுக்கு சட்டம் தெரியவில்லை விசாரணை நடைமுறைகள் தெரியவில்லை
7 சட்டப் பிரிவை குறிப்பிட்டு மனுதாரர்கள் பேசினால் கோபமாக எனக்கு சட்டம் சொல்லித் தருகின்றாயா உன் மனுவை தள்ளுபடி செய்துவிடுவேன் என்று சொல்வதும் டேபிள் வெயிட்டை டமால் என்று போட்டு உடைப்பதும் செய்கின்றார்கள்
8 நீ நின்றுதான் சொல்ல வேண்டும் அமரக் கூடாது என்று மனுதாரர்களை நினற படியே பேசச் சொல்கின்றார்கள்.
9 ஸ்பீக்கிங் ஆர்டர் போடுவது இல்லை
10 பொது தகவல் அலுவலரை  ஏன் தகவல் தரவில்லை என்று கேட்பது இல்லை அவருக்கு அபராதம் விதிப்பதும் இல்லை அவருக்கு தண்டனையும் அளிப்பதில்லை

11 ஆணையர்கள் பொது தகவல் அலுவலர்களை விசாரணைக்கு முன்னும் விசாரணைக்கு பின்னரும் தனியாக சந்திக்கின்றார்கள் லஞ்ச ஒழிப்புத் துறையே ஒரு கண் வையுங்கள்
12  பொது தகவல் அலுவலர் தகவல் தந்துவிட்டேன் என்று சொன்னால் அதான் கொடுத்து விட்டார்களே என்று மனுதாரகளை திருபக் கேட்பதும் அவர்கள் தகவல் கொடுத்தார்களா என்று கேட்பது என்வேலை கொடுத்த தகவல் சரியா தவறா என்று பார்ப்பது என் வேலை இல்லை என்று சொல்ல்கின்றார்கள்
13 தகவல் இருந்தால் தானே தருவார்கள் இவர்கள் அலுவலகத்தில் இலாத தகவலை எப்படிதருவார்கள் என்கின்றார்கள்
14


1 நீதிபதி ஒருவர் முன்னிலையில் விசாரணை நடைபெற வேண்டும்
2 பத்திரிக்கையாளர்கள் தொலைக்காட்சி நிருபர்கள் விசாரணையின் பொது அனுமதிக்கப்பட வேண்டும்
3 சென்னையில் மட்டுமே விசாரணை என்று இல்லாமல் தமிழகத்தில் மூன்று மாவட்டங்கள் ஒருங்கிணைத்து அந்த மாவட்ட தலை நகரிலேயே விசாரணை நடைபெற வேண்டும்
4 வழக்கில் ஆஜர் ஆகாத பொதுத் தகவல் அலுவலருக்கு கொவாரன்ட் பிறப்பிக்கப் பட வேண்டும்
5 ஆணையம் விசாரணை நடைபெறும் இடத்தில் ஒளிப்பதிவு கண்காணிப்பு கேமரா பொருத்தப் பட வேண்டும்.
6 விண்ணப்பதாரர்கள் ஆஜரான விசாரணை செய்யப்பட்ட பொது பதிவு செய்யப்பட்ட வீடியோ பதிவை விற்ப்பனைக்கு தர வேண்டும்
7 விண்ணப்பதாரர்கள், ஆணையத்தில் ஆஜரான பொது சம்பத்தப்பட்ட பொதுத் தகவல் அலுவலர் மற்றும் விண்ணப்பதாரர் வாக்குமூலம் ஆணையர் தீர்ப்புரை உள்ளிட்ட வீடியோ பதிவை ஆணையத்தின் இணையத்தில் வெளியிட வேண்டும்.
8 ஆணையர்கள் விண்ணப்ப தாரர்களை ஒருமையில் அழைப்பது அவமரியாதை குறைவாக  நடத்துவது மனுதாரர்களை மிரட்டுவது போன்ற செயல்களை நிறுத்திக்கொள்ள வேண்டும்
9 மனுதாரர்களை நிற்கவைத்து விசாரணை செய்யக்கூடாது

போன்ற கருத்துக்கள் சொல்லப்பட்டது

இவைகளை அமல்படுத்த கோரி இந்தியன் குரல் மூலம் ஒருங்கிணைந்து போராடுவது. ஆர்ப்பாட்டம் நடத்துவது நீதிமன்றத்தில் ஆணையர்கள் மீது வழக்கு தொடுப்பது, மாநிலம் முழுதும் தகவல் ஆணையத்தால் பாதிக்கப்பட்ட மனுதாரர்களை ஒருங்கிணைப்பு செய்வது என்ற கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டது.

தீர்வு; 29.6.2013 அன்று காலை மீண்டும் இதே கருத்தில் கூடுவது அதில் இன்னும் பாதிக்கப்பட்ட மனுதாரர்கள் கலந்துகொள்ளச் செய்து முடிவு எடுப்பது என்று தீர்மானிக்கப் பட்டது

கருத்துகள் இல்லை: